என் பெற்றோரின் சதாபிஷேகத்தும்,
சென்னையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கும்
உண்மையான அன்போடு வந்து கலந்து கொண்ட உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி! நன்றி! நன்றி!
----------------------------------------------------------------------------------------------------------------------------------நன்றி! நன்றி! நன்றி!
வணக்கம்.
நாங்க தான் முகில் கார்த்திக்-ஜெய ரூபிணி.
நாங்க உங்க எல்லோருக்கும்
ஒரு சேதி சொல்லப் போறோம்...
என்ன சொல்லப் போறோம்னு
தெரிஞ்சுக்க எங்க கூடவே வாங்க...
நாங்க சென்னையில் இருக்கோம்.
இவங்க தான் எங்க அப்பா அம்மா.
அப்பா பெயர் சேது. அம்மா பெயர் சபரி.
இவங்க தான் எங்க அப்பாவோட அப்பா அம்மா.
எங்களோட செல்ல தாத்தா பாட்டி.
இவங்களுக்கு சதாபிஷேகம் நடக்கப் போகிறது.
இவங்களோட சதாபிஷேகத்தைப் பார்க்க,
நாங்க ரொம்ப ஆசையா இருக்கோம்.
நீங்களும் அப்படித் தானே!!!